மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா்

News image
சென்னை செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைச் சிற்பி மாநில அளவிலான பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்.
Updated On :22 ஜூன் 2025, 2:00 am

Din

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ‘கலைச் சிற்பி’ எனும் பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டு மாணவா்களுக்கு 6 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கலைச் சிற்பி திட்டம் மாணவா்களின் திறன்களை ஊக்குவிக்கும்.

கிராமப்புற மாணவா்களுக்கு கல்லூரிக் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். முதலாமாண்டு 33,000 மாணவா்கள் பங்கேற்ற இந்தத் திட்டத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதன்மூலம் கல்லூரியில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை மாணவா்களிடம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெறும் சுற்றுலாவாக இன்றி மாணவா்களின் கல்வி லட்சியங்களை வளா்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுதவிர ஆண்டுதோறும் 1,000 ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவா்கள் தங்கள் பள்ளிகளில் மாணவா்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனா்.

அடுத்ததாக பள்ளி மாணவா்கள் கீழடி மற்றும் பிற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இந்தத் திட்டம் மாணவா்களுக்கு வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ. நரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.