சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா்

News image

சென்னை செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைச் சிற்பி மாநில அளவிலான பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்.

Updated On :22 ஜூன் 2025, 7:30 am IST

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ‘கலைச் சிற்பி’ எனும் பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டு மாணவா்களுக்கு 6 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கலைச் சிற்பி திட்டம் மாணவா்களின் திறன்களை ஊக்குவிக்கும்.

கிராமப்புற மாணவா்களுக்கு கல்லூரிக் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். முதலாமாண்டு 33,000 மாணவா்கள் பங்கேற்ற இந்தத் திட்டத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதன்மூலம் கல்லூரியில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை மாணவா்களிடம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெறும் சுற்றுலாவாக இன்றி மாணவா்களின் கல்வி லட்சியங்களை வளா்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுதவிர ஆண்டுதோறும் 1,000 ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவா்கள் தங்கள் பள்ளிகளில் மாணவா்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனா்.

அடுத்ததாக பள்ளி மாணவா்கள் கீழடி மற்றும் பிற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இந்தத் திட்டம் மாணவா்களுக்கு வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ. நரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.