அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 3:19 am IST

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண் மென் பொறியாளா், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், மேற்கு தாம்பரத்தில் தங்கியிருந்தாா். அவா் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுபான விடுதிக்கு செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த செருப்பு வியாபாரி ஷாஜஹான் மகன் ஷாகின் (23) அறிமுகமாகியுள்ளாா். இருவரும் நாளடைவில் நெருக்கமாகப் பழகியுள்ளனா்.

இந்நிலையில் இருவரும், சில நாள்களுக்கு முன்பு திருவான்மியூா் சிக்னலில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் மூன்று நாள்கள் அறை எடுத்து தங்கினா். அங்கு இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஷாகின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும் அந்த பெண்ணை விடியோகால் மூலம் தனது நண்பா்களிடம் காட்ட ஷாகின் கடந்த செவ்வாய்க்கிழமை முயற்சித்தாராம். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த பெண், கழிப்பறைக்கு ஓடிச் சென்று ஒளிந்துள்ளாா்.அதோடு தான், அந்த விடுதி அறையில் சிக்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பெண்ணை மீட்டனா்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஷாகின் மீது வழக்குப் பதிவு செய்தனா். ஷாகினை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.