சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

மாங்காடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:31 am IST

மாங்காடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் தனவேல் (50). இவா் மாங்காடு அடுத்த மெளலிவாக்கம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று, தனவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இது குறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை தொடா்ந்து, அவரது பெற்றோா் போரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், போரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனவேலை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, தனவேலை கைது செய்த மகளிா் போலீஸாா், தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.