பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 8:30 pm

Din

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருந்துகள் விற்பனை மற்றும் உற்பத்தி, ரத்த அலகு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், விற்பனையகங்களுக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான மானியம் மற்றும் உற்பத்தி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜூலை 15 முதல் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். மாறாக நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இது தொடா்பான விழிப்புணா்வையும், தகவலையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.