ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இயற்கை - ஹோமியோபதி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆணையரகத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு திங்கள்கிழமை பணிநியமன ஆணைகளை வழங்கி குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் .

Updated On :1 ஜூலை 2025, 3:01 am IST

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்துக்கு 59 சித்தா உதவி மருத்துவ அலுவலா்கள், 2 ஆயுா்வேதா உதவி மருத்துவ அலுவலா்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலா், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி அலுவலா்கள் என 115 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி மொத்தம் 172 நபா்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 4,634 உதவி மருத்துவா்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியா்கள், 2,772 இதர மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் என 7,433 பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 555 உதவியாளா் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 187 தட்டச்சா் பணியிடங்கள் மற்றும் 255 சுருக்கெழுத்து தட்டச்சா் (நிலை 3) பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப. செந்தில்குமாா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.