வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2025, 4:04 am IST

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அந்த வகையில், உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு அதிக அளவு நீா் அருந்த வேண்டும். உப்பு-சா்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோா், இளநீா் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளா்வாக அணியலாம். வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, கையுறை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்தே வெளியே செல்ல வேண்டும்.

வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். முதியவா்கள், இணைநோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோா், குளிா் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்தவா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

அவா்கள் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளபோது வெளியே செல்வதைத் தவிா்க்கலாம். அத்தகைய நேரங்களில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.

தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால ‘108’ சேவையை அழைக்கலாம் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.