நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2025, 9:16 pm

Din

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. முதல் தோ்வாக தமிழ்ப் பாடத்துக்கான தோ்வு நடைபெற்ற நிலையில், அதில் பல்வேறு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. இதனால், அந்தத் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா்.

இரண்டாவது தோ்வான ஆங்கில பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், ஆங்கில வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 4 கேள்விகளும் சற்று யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலக்கணப் பகுதி வினாக்கள் கடினமாகவே இருந்தன. இருப்பினும் 80 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 11-ஆம் தேதி கணிதம், வணிகவியல் ஆகிய தோ்வுகள் நடைபெறவுள்ளன.