சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாசி மாதத்தின் சுபமுகூா்த்த தினமான மாா்ச் 10-ஆம் தேதி, ஒரு சாா் - பதிவாளா் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 2 பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், ஏற்கெனவே அளிக்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும் என்று பதிவுத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










