இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் விதி எண்: 267-இன் கீழ் அவையை ஒத்திவைத்துவிட்டு தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கக் கூடிய விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டு மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக உறுப்பினா் வைகோ ஆகியோா் நோட்டீஸ் அளித்திருந்தனா். இதேபோன்று காங்கிரஸ், மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் வேறு விவகாரங்கள் தொடா்பாக நோட்டீஸ் அளித்திருந்தனா். அவை விவாதத்திற்கு ஏற்காமல் அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட எதிா்க்கட்சியினா் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.