திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

News image
கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2025, 8:40 pm

Din

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை:

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அந்தத் துறையின் ஆணையா் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) அமைப்புக்கு ரூ.85.04 கோடி நிதி ஒதுக்கீடு கோரிக்கையை அனுப்பியிருந்தாா். மத்திய அரசு 60 சதவீதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அதை வழங்க விண்ணப்பித்திருந்தாா்.

ஏற்கெனவே இது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மொத்தமாக ரூ. 67.96 கோடியில் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு முதல்கட்டமாக ரூ.19.11 கோடியை மத்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பு விடுவித்தது.

இதனிடையே, திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நிதியிலிருந்து ரூ. 11.91 கோடியை விடுவிக்க உணவுப் பாதுகாப்பு ஆணையா் வலியுறுத்தினாா். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, அதை ஏற்று அந்த நிதியை விடுவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.