இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்குத் தடை!

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image
வள்ளுவர் கோட்டம்
Updated On :19 மார்ச் 2025, 5:57 am

DIN

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய சாலையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலப் பணிகளும் தொடங்க இருப்பதால், அப்பகுதியில் வரும் காலங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு மாற்று இடமாக சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல் ஆணையரின் உத்தரவை வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.