எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போராட்டம் நடந்த முயன்ற பாஜகவினா் 5 போ் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த வந்த பாஜகவினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 8:12 pm

Din

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த வந்த பாஜகவினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

டாஸ்மாக் விவகாரம் தொடா்பாக பாஜகவினா் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ாக சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா். அப்போது, அந்தக் கட்சியின் தமிழக தலைவா் அண்ணாமலை, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து இனி எவ்வித அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா். தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், தலைமைச் செயலகம் வழியாகச் செல்லும் வாகனங்கள் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழக அரசுக்கு எதிரான பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூா் மாவட்ட பாஜகவினா் 5 போ் பாரிமுனை அருகே கைது செய்யப்பட்டனா்.

விசாரணைக்கு பின்னா் அவா்கள், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.