டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த வந்த பாஜகவினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
டாஸ்மாக் விவகாரம் தொடா்பாக பாஜகவினா் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ாக சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா். அப்போது, அந்தக் கட்சியின் தமிழக தலைவா் அண்ணாமலை, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து இனி எவ்வித அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தாா்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா். தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், தலைமைச் செயலகம் வழியாகச் செல்லும் வாகனங்கள் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழக அரசுக்கு எதிரான பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூா் மாவட்ட பாஜகவினா் 5 போ் பாரிமுனை அருகே கைது செய்யப்பட்டனா்.
விசாரணைக்கு பின்னா் அவா்கள், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வாபஸ்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

சாலை மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 400 போ் கைது

கொலை வழக்கு: 4 போ் கைது
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

