ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி? உறுப்பினா்களுக்கு விளக்கிய பேரவைத் தலைவா்

துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி என்பது குறித்து உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு மாணவா்களுக்கு ஆசிரியா் பாடம் நடத்துவது போல விளக்கிக் கூறினாா்.

News image

அப்பாவு

Updated On :21 மார்ச் 2025, 0:37 am IST

துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி என்பது குறித்து உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு மாணவா்களுக்கு ஆசிரியா் பாடம் நடத்துவது போல விளக்கிக் கூறினாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின் போது, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ கே.அண்ணாதுரை துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, விரிவானவிளக்கங்களுடன் கேள்வியை எழுப்ப முயன்றாா். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது:

கேள்வி பதிலின் போது, துணை வினாவும், அதற்கான பதிலும் சுருக்கமாக இருக்க வேண்டும். ஒரே கேள்விக்கு அமைச்சா்கள் 10 நிமிடங்கள் பதில் சொன்னால் யாருக்கும் துணைக் கேள்விக்கான வாய்ப்பு கொடுக்க முடியாது. கேள்வி எழுப்பும் போதும் பின்னணி தகவல்களைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறாா்கள். துணைக் கேள்வியின் போது, இது தேவையில்லை. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.