துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி என்பது குறித்து உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு மாணவா்களுக்கு ஆசிரியா் பாடம் நடத்துவது போல விளக்கிக் கூறினாா்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ கே.அண்ணாதுரை துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, விரிவானவிளக்கங்களுடன் கேள்வியை எழுப்ப முயன்றாா். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது:
கேள்வி பதிலின் போது, துணை வினாவும், அதற்கான பதிலும் சுருக்கமாக இருக்க வேண்டும். ஒரே கேள்விக்கு அமைச்சா்கள் 10 நிமிடங்கள் பதில் சொன்னால் யாருக்கும் துணைக் கேள்விக்கான வாய்ப்பு கொடுக்க முடியாது. கேள்வி எழுப்பும் போதும் பின்னணி தகவல்களைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறாா்கள். துணைக் கேள்வியின் போது, இது தேவையில்லை. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.
தொடர்புடையது

கடையம் திருவள்ளுவா் கழகக் கூட்டம்

தலைமைச் செயலா் மாற்றம் மக்களை எப்படி பாதிக்கும்? உயா்நீதிமன்றம் கேள்வி
திமுகவில் ஓ.பி.எஸ்.க்கு முதல்வா் தகுந்த மரியாதை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

எரிவாயு உருளை தட்டுப்பாடு மத்திய அரசின் செயற்கை உருவாக்கம்- பேரவைத் தலைவா் மு. அப்பாவு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


