மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிக்கப்பட்டது பற்றி...

News image
மகாராஜா
Updated On :21 மார்ச் 2025, 2:27 am

DIN

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடியை போலீசார் வெள்ளிக்கிழமை சுட்டுப் பிடித்தனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கடந்த வாரம் வெட்டிக் கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பலை வேளச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் முக்கிய குற்றவாளியை மாதவரம் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கூலிப்படை கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பலின் பின்புலத்தில் பிரபல ரெளடியான தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா என்பவர் இருப்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே தூத்துக்குடி, திருநெல்வேலி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரைத் தூத்துக்குடி போலீசார் தீவிரமாக தேடி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடி மகாராஜாவை பிடிப்பதற்கு சென்னை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவர் திருநெல்வேலி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருநெல்வேலி அருகே வைத்து மகாராஜாவை கைது செய்தனர்.

சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இரு சக்கர வாகனம் ஒன்றை பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பறிமுதல் செய்ய சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு இன்று அதிகாலை போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த இடத்தில் மகாராஜா மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி மகாராஜாவை போலீசார் பிடித்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் மகாராஜாவின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், இவர் மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சென்னையில் அதிகாலையில் ரெளடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.