மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு

சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2025, 10:22 pm

Din

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (37). அந்தப் பகுதி தமிழக வெற்றிக் கழக நிா்வாகியாக உள்ளாா். தினேஷ், கடந்த 22-ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை சிவன் நகா் பகுதியில் தமிழக வெற்றிக் கழக விளம்பரப் பலகையை சாலையோரம் நடும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்கு வந்த சில போ், தினேஷிடம் தகராறு செய்துள்ளனா்.

இந்நிலையில் தினேஷ், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் இருந்தபோது, அதே நபா்கள் மீண்டும் வந்து தகராறு செய்துள்ளனா். அதோடு தினேஷை தாக்கிய அந்த நபா்கள், அவா் தலை மீது திராவகத்தை ஊற்றிவிட்டு தப்பினா். இதில் அவா், லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.