சென்னை : புதன்கிழமை அட்சய திருதியை நாள் என்பதால், ஏராளமானோர் சொத்துகள் வாங்கியதன் மூலம், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியிருக்கிறது.
சொத்துகள் வாங்க - விற்க அதிகமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிவார்கள் என்பதால், நேற்று வழக்கத்தை விட அதிகமான டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், அட்சய திருதியை நாளான நேற்று, ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று கடந்த அட்சய திருதியை நாள்களிலும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டிருந்தாலும் இது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து பதிவுத்துறை புதிய சாதனை படைத்திருப்பதாக அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.10ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 16 - நேரலை
தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர்!

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



