ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜான்

தமிழகத்தில் அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும் என்பது பற்றி பிரதீப் ஜான் விளக்கம்

News image
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்- Center-Center-Chennai
Updated On :5 மே 2025, 8:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

மே 4ஆம் தேதி கத்திரி வெய்யில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்து வரும் கத்திரி வெய்யில் நாள்கள் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் எப்படி தொடங்கியது கத்திரி வெய்யில்? பரவலாக பலத்த மழையுடன். கடந்த இரண்டு நாள்களாக இருந்த வெப்பத்தை இந்த மழை வெகுவாகக் குறைத்துவிட்டது. இந்த அக்னி நட்சத்திரக் காலம் இவ்வாறுதான் இருக்கப் போகிறது. ஒரு சில நாள்கள் கடுமையான வெப்ப நாள்காகவும், அடுத்து ஒரு சில நாளில் மழை பெய்து, வெப்ப அளவு குறைந்துவிடும். இப்படித்தான் அடுத்து வரும் நாள்கள் இருக்கப் போகின்றன.

நேற்றைய வெப்ப அளவைக் காட்டிலும் இன்று வெய்யில் குறைந்துள்ளது. தமிழகத்தில் வெப்ப அளவில் வழக்கம் போல வேலூர் மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது என்று தெரிவித்து மழை நிலவரம் குறித்த தரவுகளையும் இணைத்துள்ளார்.

Story image

இந்தப் பதிவுக்கு அடுத்து எப்போது மழை வரும் என்று சிலரும், நெல்லையைச் சேர்ந்தவர்கள், சூரியன் பக்கத்தில் நெல்லை குடிபெயர்ந்து போனது போல இருக்கிறது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், மக்களே சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருந்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக மழை பெய்தது. இது மே 10 வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.