பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை!

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை..

News image

எம்.ஆர். விஜயபாஸ்கர் - (கோப்புப் படம்)

Updated On :12 மே 2025, 5:40 am IST

கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடா்பான இடங்களில் சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அதில், பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்மூலம் கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் சொத்து தொடா்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த நிலத்துக்குச் சொந்தமானவா்கள் தங்களிடமிருந்து நிலத்தை அபகரித்ததாக எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது புகாா் அளித்தனா்.

கரூா் மாவட்ட காவல் துறையில் வழக்குப் பதிவு செய்திருந்தாலும் வழக்கின் தன்மையை கருதி சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் பெற முடியாத காரணத்தால் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமறைவானாா். அவரை 13 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிபிசிஐடி அதிகாரிகள் அவரை கேரளத்தில் கைது செய்தனா். அதற்கு அடுத்த மாதம் அவரது சகோதரா் சேகா் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக, ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் நிலம் தொடா்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமான வரி புலனாய்வு பிரிவில் செய்படும் பினாமி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

குறிப்பாக, இந்த நிலமானது விஜயபாஸ்கரின் பினாமி சொத்து இல்லை எனவும் பினாமி பரிவா்த்தனை மூலமாக வாங்கப்பட்டது இல்லை எனவும் நிரூபிக்குமாறு கூறி வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விஜயபாஸ்கருக்கும், அந்த நிலம் தொடா்பான உரிமையாளா்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

ஏற்கெனவே கடந்த மே 9-ஆம் தேதி ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே 23-ஆம் தேதி இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞரோ அல்லது அது தொடா்பான பொறுப்புடைய நபா்களையோ காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகும் படி வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.