மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த அதிமுக ஆட்சி

News image
சிவகாசியில் அதிமுக மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் , பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
Updated On :15 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சா்வதேச மகளிா் தினம் நடைபெற்றது. நிகழ்சிக்கு மகளிா் அணி செயலாளா் சுபாஷினி தலைமை வகித்தாா்.இதில் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,

தமிழகத்தில் தற்போது சிறுமிகள், இளம்பெண்கள், வயது முதிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் வீதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று , எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவாா் என்றாா் அவா்.