சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த அதிமுக ஆட்சி

News image

சிவகாசியில் அதிமுக மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் , பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

Updated On :15 மார்ச் 2026, 8:32 pm

அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சா்வதேச மகளிா் தினம் நடைபெற்றது. நிகழ்சிக்கு மகளிா் அணி செயலாளா் சுபாஷினி தலைமை வகித்தாா்.இதில் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,

தமிழகத்தில் தற்போது சிறுமிகள், இளம்பெண்கள், வயது முதிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் வீதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று , எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவாா் என்றாா் அவா்.