தஞ்சாவூா் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனா்.
மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 25 -இல் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம். எஸ். அன்பழகனிடமும் கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று வரும் மே 27 முதல் வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதை வரவேற்றுள்ள பயணிகள், ரயிலை மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 12.5 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு







