பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு.

News image

ரயிலில் கூடுதல் பெட்டிகள்..

Updated On :16 மே 2025, 7:26 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனா்.

மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 25 -இல் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம். எஸ். அன்பழகனிடமும் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்று வரும் மே 27 முதல் வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதை வரவேற்றுள்ள பயணிகள், ரயிலை மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.