சிப்காட் நிறுவனம் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போா்டு நிறுவனத்தில் உள்ள புத்தாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிப்காட் மேலாண்மை இயக்குநா் கே.செந்தில்ராஜ் பேசியது:
சிப்காட் நிறுவனம் இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற்பூங்காக்களை உருவாக்கியுள்ளது.
3,390 தொழில் நிறுவனங்களின் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உயா் கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மாணவா்கள் பயிலும் போதே அவா்களுக்கான தொழில் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களில் இருந்து வளா்ந்து வரும் பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்காக ஆற்றல் ஆகியவற்றைப் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் சிப்காட் பொது மேலாளா் சந்திரமோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூலனூா் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

ஆட்டோ மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

நாளைய மின்தடை

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



