ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: விவரங்கள் கோரும் கல்வித் துறை

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவது தொடா்பாக பள்ளிக் கல்வியில் ஆசிரியா்கள், ஊழியா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2025, 8:05 pm

Din

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவது தொடா்பாக பள்ளிக் கல்வியில் ஆசிரியா்கள், ஊழியா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக் காலத்தில் 1.9.2024 முதல் 31.1.2025 வரை காலமான, மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்களை எவ்வித விடுதலுமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அதற்கு முந்தை மாதத்தில் காலமான, மருத்துவ இயலாமையால் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவிட்டு, அதை மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.