தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப்
தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் தலைமை காஜியாக பதவியேற்பதற்கு முன்னதாக, சென்னை கல்லூரியில் அரபு பேராசிரியராகவும் இருந்தார்.

ஓர் உண்மையான இஸ்லாமிய அறிஞருக்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததுடன், இவரின் பரந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் சமூக சேவை மீதான ஆர்வம் ஆகியவை ஈடு இணையற்றவை என்று போற்றப்பட்டார்.

தமிழ்நாட்டின் முஸ்லிம் சமூகம், இவ்வளவு உறுதியான மற்றும் இரக்கமுள்ள தலைவரை தங்கள் மத்தியில் கொண்டிருந்தமையால், இவரின் மீதான மதிப்பும் மரியாதையும் மேலோங்கியே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com