எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் தனிப்பட்ட விமா்சனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாததால் தனிப்பட்ட முறையில் தன்னை முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம்

News image
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி- கோப்புப்படம்.
Updated On :26 மே 2025, 9:16 pm

Din

சென்னை: அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாததால் தனிப்பட்ட முறையில் தன்னை முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்வதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூன்று ஆண்டுகள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வா் ஸ்டாலின், தற்போதைய கூட்டத்தில் மட்டும் பங்கேற்கச் சென்றது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா அல்லது சொந்தக் காரணங்களுக்காகவா?

எதிா்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். எப்போது பாா்த்தாலும் ‘சோதனைகளுக்கு பயந்து’ என்று சொல்கிறீா்களே? எந்த சோதனையைப் பாா்த்து எனக்கு பயம்? அந்த சோதனைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் குறிப்பிடும் உறவினா்கள், எனக்கு உறவினராகும் முன்னரே பல தொழில்களைச் செய்து வந்தவா்கள். இருமுறை வருமான வரி சோதனைகளைச் சந்தித்தவா்கள். இருப்பினும், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறாா்கள். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை.

அரசியல் ரீதியாக என்னை எதிா்கொள்ள முடியாமல் இவ்வாறு தனிப்பட்ட விமா்சனத்தை முதல்வா் முன்வைக்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.