
தமிழ்நாட்டில் ஜூன்7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை காஜி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஷரியத் அறிவிப்பின்படி,
ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது.
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) சனிக்கிழமை 07-06-2025 கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமிய பெருமக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியும், குர்பானி அளித்தும் தங்களின் நன்றியையும் பக்தியையும் வெளிப்படுத்துவார்கள்.
இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவதும் மிக முக்கியமான கடமையாக திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதனால், இஸ்லாமியர்கள் மூன்றில் ஒரு பகுதி இறைச்சி, உணவு ஆகியவற்றை தானமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.