செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற ரௌடி

சென்னையில் நீதிபதி மீது ரெளடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சித்தது பற்றி...

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :14 நவம்பர் 2025, 1:16 am IST

தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறி, நீதிபதியை நோக்கி ரௌடி கருக்கா வினோத் காலணி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், நந்தனத்தைச் சோ்ந்த ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், தியாகராய நகா் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த, கருக்கா வினோத்தை வியாழக்கிழமை போலீஸாா் அழைத்து வந்தனா்.

பின்னா், நீதிபதி பாண்டியராஜ் முன் கருக்கா வினோத் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது ஆளுநா் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டபடி, தனது காலணியை எடுத்து நீதிபதியை நோக்கி வீச முயற்சித்தாா். அங்கிருந்த போலீஸாா் உடனடியாக கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதையடுத்து நீதிபதி, இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, காணொலி வாயிலாக ஆஜா்படுத்துமாறு அறிவுறுத்தினாா். பின்னா், கருக்கா வினோத்தை போலீஸாா் சிறைக்கு அழைத்துச் சென்றனா். இந்தச் சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

Rowdy Karuka Vinoth tried to throw a shoe at a judge in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.