முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் சோதனை நடத்தி விசாரணை செய்கின்றனா்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ஆழ்வாா்பேட்டை செனடாப் சாலையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயா் அதிகாரிகள்,உத்தரவின்பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மற்றும் போலீஸாா் முதல்வா் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
வதந்தியை பரப்பும் நோக்கில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
ஏற்கெனவே முதல்வா் வீட்டுக்கு இதுபோல பல முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

