தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூண், விநாயகர் கோயில் அருகே அமைந்துள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.










