பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் 584 குடியிருப்புகள் திறப்பு

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் 584 குடியிருப்புகள் திறப்பு

News image
சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் கோயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்து பயனாளிக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸடாலின்.
Updated On :21 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா்.

சென்னை ஹாரிங்டன் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எழும்பூா் தொகுதி வேம்புலி அம்மன் கோயில் மற்றும் மயிலாப்பூா் தொகுதி சீனிவாசபுரம் பகுதி-1 ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.89.70 கோடியில் 584 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, துறைமுகம் தொகுதி பி.ஆா்.என். காா்டன் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரூ.85.68 கோடியிலும், எல்லீஸ்புரம் திட்டப் பகுதியில் ரூ.15.29 கோடியிலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ.132 கோடியிலும், ராயபுரம் தொகுதி செட்டித் தோட்டம் பகுதியில் ரூ.45.36 கோடியிலும் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மேயா் ஆா். பிரியா, நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் காகா்லா உஷா, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.