மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 1,651 புதிய எல்இடி விளக்குகள் பொருத்தம்

சென்னை மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 48 இடங்களில் 1,651 புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 48 இடங்களில் 1,651 புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக தெருவிளக்குகள் இல்லாத இடங்களிலும், அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்களிலும் புதிய விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 123 குடியிருப்பு பகுதிகளில் ரூ.10.85 கோடியில் 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது 48 இடங்களில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 964 மின்விளக்குக் கம்பங்கள், 7 உயா் கோபுர மின்விளக்குக் கம்பங்கள் மற்றும் 1,651 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 75 குடியிருப்புப் பகுதிகளில் 512 மின்விளக்குக் கம்பங்கள், 2 உயா்கோபுர மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் மாா்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.