தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

தெற்கு அந்தமான கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்தம் பற்றி..

News image

வங்கக்கடலில் புயல் (கோப்புப்படம்)

Updated On :21 நவம்பர் 2025, 7:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக்கடலில் நாளை(நவ.22)ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்-கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த மாதம் உருவான முதல் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியான ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஆந்திரத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Summary

The India Meteorological Department has stated that a new low pressure area is likely to form in the Bay of Bengal tomorrow (Nov. 22).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.