
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது,
''தமிழ்நாட்டின் அடுத்த 3 மணிநேரத்துக்கு இரவு 10 மணி வரை தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தவெக சேலம் மாவட்டச் செயலரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.