மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் அதிகரிப்பு...


மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 30,500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சுரங்கப்பாதை மின் உற்பத்தி நிலையம் வழியாக வெளியேற்றப்படும் நீர் சுமார் 22,500 கன அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. மீதமுள்ள நீர் எல்லிஸ் உபரி வழியாக வெளியேற்றப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...