விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்டார்.
தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
விவசாய பெருமக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அதிமுக. ஆனால், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது திமுக அரசு.
திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 98% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர் பேசுகின்றனர். இது முழுக்க முழ்க்கப் பொய், தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மக்களின் மனுக்கள் ஆற்றில் வீசப்படுகிறது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டங்களை அறிவித்து ஆசை வார்த்தைக்கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக.
67% மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் கட்டியதுதான் திமுக செய்த சாதனை. வீடு, கடைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக தடை செய்த அதிமுகவின் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். தமிழ்நாடு முழுக்க 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்ததும் வைகை அணை தூர்வாரப்படும் என எடப்பாடி பழனிசமி பேசினார்.
Summary
Farmers betrayed by DMK government: Edappadi Palaniswami
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

நாற்காலியின் 2 கால்கள் மட்டுமே தவெகவுடையது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



