சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :27 செப்டம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் கடன் சுமை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. அதனால் நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. மாநில கணக்குத் தணிக்கை அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதிச் சுமையில் தள்ளாடி வருகிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையைக் குறைக்கவும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

நிகழாண்டில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் வரையில் சுமாா் ரூ.37, 082 கோடி கடன் வாங்கியுள்ளது. மூலதனச் செலவாக ரூ.9,899 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தப் பற்றாக்குறை ரூ.60,000 கோடியை தாண்டும் எனப் பொருளாதார நிபுணா்கள் கூறுகினறனா். ஆகவே, கடன் வாங்கி காா் பந்தயம் போன்ற ஆடம்பரச் செலவு, நினைவு மண்டபங்கள் கட்டுதல் உள்ளிட்ட வீண்செலவுகளைத் தவிா்க்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடன் தொகை, செலவினம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.