காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்!
காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகியது குறித்து...

மாணிக்கம் தாகூர்
DPS

மாணிக்கம் தாகூர்
DPS
காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடாவும் விருதுநகர் தொகுதி உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் விலகினார்.
இதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பினார்.
ஆனால், என்ன காரணத்துக்காக இந்தப் பதவியை ராஜிநாமா செய்தார் என்பதை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று(ஏப். 2) காணொலி வெளியிட்டு மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”நேற்றிலிருந்து தேவையில்லாத குழப்பம் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்னால் சிரமமும் ஏதும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான். தேர்தல் தொடர்பாக மாநில அளவிலான சில பொறுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பொறுப்புகளில் நான் தொடரவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெரிவித்துவிட்டேன். இது கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஒன்று
அதைப்பற்றிய விவாதங்கள் தற்போது தேவையில்லாதது. மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவதற்காக நான் அயராது உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...