கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூர் கண்டனம்!

உஜ்வாலா சிலிண்டர் குறைப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக...

manickam tagore

மாணிக்கம் தாகூர் - படம்: IANS

Published On :

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்ததற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 9ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”ஏழை பெண்களுக்கு மோடி பரிசு..

உஜவாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது.

2016: 12 சிலிண்டர்கள் மனியம்

கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு

இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!

ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!

“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது — உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவாக பயன்படுத்துகின்றனர்,

தேவை இல்லாததால் அல்ல; இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Regarding Manickam Tagore's condemnation of the reduction in Ujjwala cylinder benefits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.