திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:54 pm

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடா் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, வார இறுதி நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 575 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 100 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 24 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) ஆகிய தினங்களில் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை 735 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.