ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:54 pm

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடா் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, வார இறுதி நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 575 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 100 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 24 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) ஆகிய தினங்களில் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை 735 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.