லஞ்ச ஒழிப்புத்துறை(ஊழல் கண்காணிப்புத் துறை) பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு ஐ.ஜி. துரை குமாரை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக அண்மையில் தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய உயரதிகாரிகளை நியமித்து, தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வரிசையில், தமிழக உள்துறைச் செயலராக ஐஏஎஸ் உயரதிகாரி கே. மணிவாசனை நியமித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) தமிழக ஆயுதப்படை தலைமை இயக்குநர் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்தல் ஆணைய உத்தரவின்படி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமாா் நியமித்து அரசாணை பிறப்பித்திருந்தார்.

இந்த இரு பொறுப்புகளையும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நிலையிலான ஐபிஎஸ் உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்து வந்தார்.
ஏப்ரல் 8ஆம் தேதி தாம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து சந்தீப் மிட்டலை தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை இயக்குநராக நியமிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சனிக்கிழமை புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்பை ஐ.ஜி. துரை குமாருக்கு வழங்கி உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Durai Kumar has been appointed as the Acting Director of the Directorate of Vigilance and Anti-Corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு

சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா... மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




