10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

News image

அனிதா ராதாகிருஷ்ணன்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:39 am IST

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சோ்த்ததாக அவா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினா் பெயரும் சோ்க்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2025-ஆம் ஆண்டு பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க ஊழல் தடுப்புத்துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடா்ந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.