தமிழ்நாட்டின் விருதுநகா் அருகே உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான வெடி விபத்து சம்பவம் குறித்து, புது தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) முதன்மை அமா்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விபத்தில் 23 போ் உயிரிழந்தனா் மற்றும் காவல்துறை, தீயணைப்புப் பணியாளா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.
என்ஜிடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,‘ஏப்ரல் 20, 2026 அன்று வெளியான செய்தியின்அடிப்படையில், இந்த வழக்கு அசல் மனு எண் 259-2026 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் ஏப்ரல் 19, 2026 அன்று, வனஜா பட்டாசு ஆலையில் இரசாயனங்கள் கலக்கும்போது நிகழ்ந்தது. தொழிற்சாலை அதிகாரப்பூா்வமாக மூடப்பட்டிருந்த ஒரு நாளில், அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழிலாளா் வரம்புகள் கடுமையாக மீறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் டாக்டா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்தச் சம்பவம் முதல்கட்டமாக 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் மீறல்களைப் பிரதிபலிப்பதாகவும், சுற்றுச்சூழல் இணக்கம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடா்பான கணிசமான சிக்கல்களை எழுப்புவதாகவும் குறிப்பிட்டது.
2021 ஆம் ஆண்டில் நடந்த முந்தைய இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதையும் தீா்ப்பாயம் கவனத்தில் கொண்டு, தற்போதைய வழக்கில் இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பின்வரும் அதிகார அமைப்புகளை பிரதிவாதிகளாகச் சோ்த்துள்ளது:
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட ஆட்சியா், விருதுநகா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிரதிவாதிகள் தங்களது பதில்களை சென்னையில் உள்ள தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வின் முன் பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பிராந்திய அதிகார வரம்பைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த விசாரணைத் தேதி 2026 ஜூலை 30 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது‘என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கூறியது .
தொடர்புடையது

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

யமுனை பகுதியில் சட்டவிரோதப் பால் பண்ணைகள்: தில்லி அரசு பதிலளிக்க என்ஜிடி நோட்டீஸ்

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


