திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை மாதத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா என நடைபெறுவதும் வழக்கம்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை திருக்கல்யாணம் பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவியதுடன், மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் “சிவ சிவ”, “தாயுமான ஈசா” என கோஷங்கள் எழுப்பி பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
சித்திரைத் திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Thirukalyanam was held with great splendor on Sunday as part of the Chithirai festival at the Thayumanaswamy Temple located in the Trichy malaikottai area.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆறுமுகமங்கலம் கோயில் சித்திரைத் திருவிழா

வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

