காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பற்றி...

News image

கபினி அணை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 5:03 pm IST

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கபினி அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு 15,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளது.

நீர் திறப்பை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே கபினி அணை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

10,000 cusecs of water per second has been released from the Kabini dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.