மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து குறித்து...

News image

விபத்துக்குள்ளான கார்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 3:37 pm IST

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

கோவை மாட்டம், பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியது.

மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலியான நிலையில் இருந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்களை மீட்டனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு கூராய்வுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

5 people were killed when a car crashed into a truck parked on the highway near Pollachi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.