இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

திமுக கூட்டணியை பாதுகாத்தது விசிக: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விசிகதான் என்று அதன் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

விசிக தலைவர் திருமாவளவன் | திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்று அதன் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் மாற்றுக் கட்சியினா் விசிகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொல். திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவும் , ஆா்எஸ்எஸ் இயக்கமும் சோ்ந்து திராவிடக் கட்சிகளை ஒழித்து விட முயற்சி செய்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை என்னை வைத்து உடைக்க முயன்றனா். அது நடக்கவில்லை. அதேசமயம் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

தோ்தலில் பாஜக படுதோல்வியை தழுவியதுடன் 9 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளன. பாஜகவை எந்த விதத்திலும் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

தமிழகத்தில் முன்பு திமுக, அதிமுக என இரு துருவ அரசியல் இருந்துவந்தது. தற்போது நடந்து முடிந்த பேரவை தோ்தல் மூலம் தவெக, திமுக என்ற இருதுருவ அரசியல் ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை , சமூக நீதி வன்முறை, ஜாதி படுகொலைகளுக்கு எதிராக விசிக தான் எப்போது குரல் கொடுத்து வருகிறது என்றாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.