FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? வானதி சீனிவாசன் பதில்

திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்...

News image

வானதி சீனிவாசன் - ENS

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:50 pm IST

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர்.

மேலும் திமுகவும் பாஜகவும் இணையும் என்று தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் "அரசி​யலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்​துக்கு எது நல்​லதோ, அது எங்​கிருந்து வந்​தாலும் நாங்​கள் அதை கண்​டிப்​பாக ஆமோ​திப்​போம், வரவேற்​போம்" என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு கூறியிருந்தார்.

தொடர்ந்து இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என்று அதே பதிலைக் கூறினார்.

மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்றார்.

Summary

Is a DMK-BJP alliance? Vanathi Srinivasan responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.