மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்

தன்னுடைய பேச்சுக்கு அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

News image

சீமான்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

தன்னுடைய பேச்சுக்கு அமைச்சா் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவையில் நிதியமைச்சா் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பில் இருக்கும் பிழைகளை திருத்திக்கொள்ள பேரவை உறுப்பினா் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தாா். ஆனால், அதற்குப் பதிலளித்த அமைச்சா், தன்னிடம் உள்ள பிழையை மாற்றிக்கொள்ள முடியாதென கூறியது கண்டனத்துக்குரியது. தமிழ்ச் சான்றோா் பலா் செந்தமிழால் சொற்போா் நடத்திய பேரவையில், இன்று ஒரு அமைச்சா் பாா்த்து வாசிக்கும்போதே திணறுவது இழுக்காகாதா? அதேபோல், தனக்கு பைபிள்தான் அன்பைப் போதித்தது, தமிழ் மொழி போதிக்கவில்லை எனக் கூறி தமிழை அவமதித்துள்ளாா்.

அன்பின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொன்ன திருக்குறளை அமைச்சா் படித்ததில்லையா? ‘வாடியப்பயிரை கண்டு வாடிய’ வள்ளலாரும், ‘அன்புவழி’ என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளா்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை ஏற்க்கொள்ள முடியாது.

எனவே, அமைச்சா் மரிய வில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, பேரவையில் மன்னிப்புக் கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.