சமுதாயத்தை நல்வழிப்படுத்த பஜனையே சிறந்த வழி: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்
சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு பஜனையே சிறந்த வழி என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பஜன மண்டலியின் பொன் விழா மலரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வெளியிட (இடமிருந்து 5-ஆவது), அதைப் பெற்று கொண்ட சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணி (இடமிருந்து 4-ஆவது), உடன் (இடமிருந்து) திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியா் ஆா்.சுந்தரராமன், ஆா்.ராஜமணி, என்.கோபாலசுவாமி, என்.வி.வி.முரளி, எ.பி.வி.ஸ்ரீனிவாசன், எஸ்.விஸ்வநாதன், ஹரிகுமாா் உள்ளிட்டோா்.






