கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளதாவது:
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
à®à®°à¯à®¨à®¾à®à®à®¾à®µà®¿à®©à¯ à®à®¾à®®à¯à®°à®¾à®à¯ நà®à®°à¯ மாவà®à¯à®à®®à¯, ஹனà¯à®°à¯ தாலà¯à®à¯à®à®¾à®µà®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®¿à®°à®¾à®®à®à¯à®à®³à®¿à®²à¯ வà®à®¿à®¤à¯à®¤à¯ வநà¯à®¤ தமிழரà¯à®à®³à®¾à®© à®à®¨à¯à®¤à¯à®£à®¿ à®à®¾à®®à®¿, à®à®¾à®©à¯ à®°à¯à®¸à¯ பà¯à®à¯à®à®°à¯, à®à¯à®®à®¾à®°à¯ à®à®à®¿à®¯à¯à®°à¯, 2026 à®à®à®¸à¯à®à¯ 15 à®à®©à¯à®±à¯ à®à®¤à®¿à®à®¾à®²à¯à®¯à®¿à®²à¯, à®à®¾à®µà®¿à®°à®¿ வனவிலà®à¯à®à¯ à®à®°à®£à®¾à®²à®¯à®ªà¯ பà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯, à®à®°à¯à®¨à®¾à®à® வனத௠தà¯à®±à¯à®¯à®¿à®©à®°à®¾à®²à¯ à®à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯ வà¯à®¤à®©à¯â¦
— TVK Vijay (@TVKVijayHQ) August 16, 2026
Summary
Chief Minister Vijay condemned the shooting of 3 Tamils
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








